News October 21, 2025
காஞ்சிபுரம்: பட்டு சேலைகளின் விலை உயர்வு!

தங்கம், வெள்ளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால், பட்டுச் சேலைகளின் மூலப்பொருளான ஜரிகை விலை, ஒரே ஆண்டில் கிலோவுக்கு ரூ.50,000 வரை உயர்ந்து, ரூ.1.35 லட்சமாகியுள்ளது. இதனால் சாதாரண பட்டுச் சேலையின் விலை ரூ.10,000-15,000லிருந்து ரூ.20,000 வரை உயர்ந்துள்ளது.இதனால் சாமானியர்களால் வாங்க முடியாத பொருளாக பட்டு சேலை இருக்கிறது. இப்போது விற்பனை பாதிக்கப்பட்டு, நெசவுத் தொழிலுக்குப் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது
Similar News
News October 21, 2025
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த ஆறு மணி நேரத்தில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் 21 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. பேரிடர் தொடர்பான புகார்களை தெரிவிக்க 044 – 27237107 மற்றும் 8056221077 ஆகிய எண்களை அறிவித்துள்ளார்.
News October 21, 2025
BREAKING: செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு

தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 24 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 20.32 அடியை எட்டியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 1,100 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால் முதல்கட்டமாக ஏரியின் ஐந்து கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News October 21, 2025
செம்பரம்பாக்கம் ஏரியில் மாலை 4 மணிக்கு நீர் திறப்பு

காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு நீர் திறக்கப்பட உள்ளது. 24 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 20.32 அடியை எட்டியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் திறக்கப்பட உள்ளது. இதனால் திருமுடிவாக்கம் மற்றும் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது