News October 21, 2025

நாமக்கல் பயணிகளின் கவனத்திற்கு!

image

நாமக்கல்: பெங்களூரூ, ஹூப்ளி, மும்பை, சூரத், அகமதாபாத், ஜோத்பூர், பிகானீர் வழியாக இயக்கப்படும் 22497/22498 ஶ்ரீ கங்காநகர் – திருச்சி – ஶ்ரீ கங்கா நகர் ஹம்சாஃபர் ரயிலில் வருகிற அக்.31ஆம் தேதி வரை கூடுதலாக ஒரு ’3 tier AC’ பெட்டி இணைத்து இயக்கப்படவுள்ளது. இந்த 22497 திருச்சி ஹம்சாஃபர் ரயில் நாமக்கல் வழியாக நாளை (அக்.22) புதன் இரவு 07:45க்கு செல்லும். பயணிகள் பயன்படுத்திக்கொள்ளவும்.

Similar News

News October 21, 2025

நாமக்கல்லில் முட்டை விலை அறிவிப்பு!

image

நாமக்கல்லில் இன்று அக்டோபர்-21ஆம் தேதி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை, குளிர், உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்தது. இதன் காரணமாக ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

News October 21, 2025

நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (அக்.21) நாமக்கல்-(தங்கராஜ் – 9498110895), வேலூர் – (சுகுமாரன் – 8754002021), ராசிபுரம் – (சின்னப்பன் – 9498169092), குமாரபாளையம் – (செல்வராசு – 9994497140) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News October 21, 2025

நாமக்கல்: சிறப்பாகப் பணிபுரிந்த அதிகாரிகளுக்கு சான்றிதழ்!

image

நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பாகப் பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, இன்று (21.10.2025) மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ச.விமலா, இ.கா.ப., சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். காவல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், காவலர்களின் சீர் மிகு பணியைப் பாராட்டி அவர் கௌரவித்தார்.

error: Content is protected !!