News October 21, 2025
மதுரையில்…23 வயது வாலிபரிடம் 6 கிலோ கஞ்சா பறிமுதல்

உசிலம்பட்டி தாலுகா எஸ்.ஐ., சேகர் தலைமையில் போலீசார் ஆரியபட்டி விலக்கு பகுதியில் போதைப் பொருள் தடுப்பு சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக டூவீலரில்வந்த திருப்பரங்குன்றம் நாகராஜ் 25, விஷ்ணுகுமார் 23, ஆகியோரை நிறுத்தி சோதனையிட்டனர். அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை கைப்பற்றி, இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News October 22, 2025
மதுரை: மழைநீர் வடிகால் பணியை பார்வையிட்ட ஆட்சியர்

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன்குமார் அவர்கள் இன்று (21.10.2025)
மதுரை மாவட்டம், காமராசர் சாலைப் பகுதியில் மழை நீர் விரைவாக வெளியேற்றப்பட்டு வருவதையும், கீழவாசல் பகுதியில் பாலம் கட்டும் பணியையும் ஆய்வு செய்து பார்வையிட்டார். மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் அவர்கள் உடன் உள்ளார்.
News October 21, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

மதுரை மாவட்டத்தில் இன்று (21.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 21, 2025
தீபாவளியில் மதுரை படைத்த சாதனை.!

தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த மூன்று நாட்களில் தமிழகத்தில் மொத்தம் ரூ. 789.85 கோடி மது விற்பனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் மட்டும் ரூ.170.64 கோடி மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களிலும் விற்பனை அதிகரித்த நிலையில், இந்த பண்டிகை காலத்தில் மதுவிற்பனை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.