News October 21, 2025
கிருஷ்ணகிரியில் 400 பேர் பலி!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஜனவரி முதல் அக்டோபர் 12 வரை தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் நடந்த விபத்துகளில் சம்பவ இடத்திலும், சிகிச்சையிலும் சேர்த்து 400 பேர் வரை உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2023ல் 753 ஆக இருந்த உயிரிழப்பு 2024ல் 683 ஆக குறைந்தது. நடப்பாண்டில் இறப்பு மேலும் குறைய வாய்ப்புள்ளதாகப் போலீசார் கருதுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் கவனமாக பயணிக்கவும் அறிவுரை வழங்கப்படுகிறது.
Similar News
News October 22, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (21.10.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
News October 22, 2025
கிருஷ்ணகிரி: நூலிழையில் உயிர் தப்பிய ஓட்டுநர்

ஊத்தங்கரையிலிருந்து டாட்டா ஏசி வாகனம் இன்று (அக் 21) அனுமந்திருத்தம் சென்றது.வாகனம் வெப்பாலம்பட்டி அருகே செல்லும் பொழுது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் சிறு காயலுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்தில் காயமடைந்த ஓட்டுனரை ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
News October 21, 2025
கிருஷ்ணகிரி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

கிருஷ்ணகிரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த<