News October 21, 2025

7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

image

கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று(அக்.21) மிக கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. இதனால், அந்த மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், குமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கூறியுள்ளது.

Similar News

News October 22, 2025

ஸ்ரீலீலா தான் நேஷனல் கிரஷ்: ரன்வீர் சிங்

image

ஸ்ரீலீலா தான் உண்மையான நேஷனல் கிரஷ் என நிகழ்ச்சி ஒன்றில் ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார். அவரது ஒழுக்கம் மற்றும் திறமை ஆசாத்தியமானது எனவும், ஸ்ரீலீலாவுக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வடஇந்தியாவிலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அவர் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து அட்லீயின் விளம்பர படத்தில் நடித்திருந்தனர்.

News October 22, 2025

புயல் என்றால் என்ன தெரியுமா?

image

வளிமண்டலத்தில் காற்றழுத்தம் குறையும்போது ‘காற்றழுத்த தாழ்வு நிலை’ உருவாகிறது. தரையில் இருக்கும் வெப்பக்காற்று உயரும்போது, இப்படியான நிலை ஏற்படும். பொதுவாக இது கடற்பரப்பில் நடைபெறும். இந்த நிலை படிப்படியாக வலுவடைந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்று மாறும். இறுதியாக, சுறாவளிக் காற்றின் வேகம் 30 knotகளை கடக்கும்போது அது புயல் என அறிவிக்கப்படுகிறது. SHARE IT!

News October 22, 2025

Sports Roundup: தமிழ் தலைவாஸ் 11-வது தோல்வி

image

*புரோ கபடியில் பெங்கால் வாரியர்ஸ் 44-43 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸை வீழ்த்தியது. *ஐசிசி மகளிர் ODI பேட்டிங் தரவரிசையில், இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 3 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தை பிடித்துள்ளார். * மகளிர் நட்புறவு கால்பந்தில், ஈரான் 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. *பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன், முதல் சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென் தோல்வி.

error: Content is protected !!