News October 21, 2025
7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று(அக்.21) மிக கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. இதனால், அந்த மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், குமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கூறியுள்ளது.
Similar News
News January 18, 2026
PM மோடியை வழிநடத்தும் தர்மம் : மோகன் பகவத்

தர்மத்தின் மூலமாகவே உலகின் விஸ்வகுருவாக இந்தியாவால் உருவெடுக்க முடியும் என மோகன் பகவத் கூறியுள்ளார். தர்மம் என்ற வாகனத்தில் பயணித்தால் யாருக்கும் விபத்து ஏற்படாது என்றும், அதே ஆற்றல் தான் தன்னை, PM மோடி மற்றும் பொதுமக்களை வழிநடத்துவதாக அவர் குறிப்பிட்டார். ஒரு நாடு மதச்சார்பின்மையாக இருக்கலாம், ஆனால் தர்மத்தை பின்பற்றாமல் வாழ முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News January 18, 2026
பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

‘Why human connection matters in a digital world’ என்ற தலைப்பில் 9 – 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கட்டுரை போட்டியை CBSE அறிவித்துள்ளது. இதில் தேசிய அளவில் வெற்றிபெறும் முதல் 3 மாணவர்களுக்கு பரிசுத் தொகையாக முறையே ₹50,000, ₹25,000 மற்றும் ₹10,000 வழங்கப்படும். மேலும், பிராந்திய அளவிலும் பரிசுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது பற்றி அறிய இங்கே <
News January 18, 2026
இட்லி கல்லு மாறி இருக்கா? அப்போ இப்படி பண்ணுங்க!

நாம் விரும்பி உண்ணும் இட்லி, சில சமயங்களில் மண்டையை உடைக்கும் கல்லாக மாறிவிடுவது உண்டு. இந்நிலையில் மல்லிகை பூ போன்ற இட்லியை பெற, நீங்கள் எடுத்து வைத்துள்ள புளித்த இட்லி மாவில் ஒரு ஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெயை ஊற்றி நன்றாக கலந்துவிடவும். அதன்பின் பாத்திரத்தை மூடி 15 நிமிடங்கள் மாவை ஊறவிடுங்கள். அதன்பின்னர் மாவை இட்லி தட்டில் வைத்து வேக வைத்து எடுங்கள். மல்லிகைப் பூ போன்ற இட்லி ரெடி!


