News October 21, 2025

நெல்லை: 1 1/2 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்

image

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே புலவன் குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது ஒன்றை வயது மகன் பிரேம்குமார் நேற்று யாரும் கவனிக்காத சமயத்தில் தண்ணீர் வாளியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுக்குறித்து தகவல் அறிந்த சேரன்மகாதேவி போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News

News October 22, 2025

தீபாவளி விதிமீறல் பட்டியலை வெளியிட்ட எஸ்பி

image

நெல்லையில் தீபாவளி பண்டிகையின் போது விதிமீறல் தொடர்பாக மொத்தம் 521 வழக்குகள் போடப்பட்டுள்ளன. அதில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் 83, தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் 200, அதி வேகமாக வாகனம் ஓட்டியதாக 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தீபாவளி பட்டாசு நேர விதிமுறை மீறல் சம்பந்தமாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

News October 21, 2025

நெல்லை: பட்டாவில் பெயர் மாற்ற சூப்பர் வழி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News October 21, 2025

நெல்லை: இன்று பிற்பகல் முதல் சிறப்பு பஸ்கள்

image

தீபாவளி பண்டிகைக்காக தமிழ்நாடு அரசு இன்று கூடுதலாக 1 நாள் விடுமுறை அளித்துள்ளது. நெல்லை மாவட்டத்திற்கு வந்தவர்கள் தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை உள்ளிட்டு வெளியூர் பணிகளுக்கு செல்வதற்காக இன்று மாலை முதல் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை கோவைக்கு தேவைக்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படும்.

error: Content is protected !!