News October 21, 2025
கரூர்: எஸ்.பி அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்!

கரூர்: பிள்ளபாளையத்தைச் சேர்ந்தவர் திலக்(25). இவருக்கும் லாலாபேட்டையைச் சேர்ந்த பிருந்தா(19) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இந்நிலையில், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திருமணம் செய்துகொண்ட ஜோடி, மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.
Similar News
News January 24, 2026
கரூர்: ரூ.32,000 சம்பளத்தில் வங்கி வேலை!

கரூர் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 வளர்ச்சி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. மதம் ரூ.32,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News January 24, 2026
கரூர் அருகே சோகம்: விஷம் குடித்து தற்கொலை!

கரூர் மாவட்டம், தாந்தோன்றி மலை அருகே கணேசமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். மேலும் இவர் மாற்றுத்திறனாளி மஞ்சள் காமாலை நோயினால், சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மனம் விரக்தியில் மதுவுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பம் குறித்து தான்தோன்றி மலை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரி மேற்கொண்டனர்.
News January 24, 2026
கரூர்: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்


