News October 21, 2025

சென்னிமலை அருகே தெரு நாய்கள் கடித்து பலி!

image

ஈரோடு: சென்னிமலை யூனியன், வாய்ப்பாடி ஊராட்சி, எளையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர் ருக்குமணி என்பவரது ஆட்டுப்பட்டியில் நேற்று கூட்டமாக வந்த நாய்கள் ஆடுகளை விரட்டி கடித்ததில் இரண்டு ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும், நான்கு ஆடுகள் பலத்த காயம் அடைந்தன. இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகளும் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News October 22, 2025

பவானி: வெள்ள அபாய எச்சரிக்கை!

image

கோணமூலை ஊராட்சி பவானி ஆறு கரையோர பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால் பவானி ஆற்றில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இயல்பு நிலைக்கும் அதிகமாக பலமடங்கு வெள்ளம் வந்த வண்ணம் உள்ளதால் பவானி ஆறு கரையோரம் குடியிருப்பவர்கள் மேடான பகுதிக்கு செல்லவும். ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆற்றில் இறங்கி செல்போன் மூலம் செல்பி எடுக்கவோ கூடாது எனவும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

News October 21, 2025

ஈரோடு மாவட்ட குழந்தை தொழிலாளர் மீட்பு இலவச எண்!

image

ஈரோடு, தமிழ்நாட்டில் தொழிலாளர் துறை குழந்தை தொழிலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் குழந்தைத் தொழிலாளர்களை ஒழித்தல் மற்றும் மீட்பு குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிப்பது முக்கிய முன்னுரிமைகள் என தொழிலாளர் துறை அறிவித்துள்ளது. மேலும் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் குழந்தைகள் மீட்பு இலவச தொலைபேசி எண்.1098 தொடர்பு கொள்ளவும்.

News October 21, 2025

ஈரோடு: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

ஈரோடு மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்ணுகளில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!