News October 21, 2025
தருமபுரி: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்.
Similar News
News February 13, 2026
தருமபுரியில் இரவு முழுவதும் துடிதுடித்து பலி!

புதூரை சேர்ந்த காய்கறி வியாபாரி வெங்கடேஷ் குமார் (31). இவர் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடித்து விட்டு பைக்கில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் தடுப்பு சுவரில் மோதி தூக்கி வீசப்பட்டார். இரவு முழுவதும் துடித்த இவரை நேற்று காலை பொதுமக்கள் பார்த்து ஏ.பள்ளிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது.
News February 13, 2026
தருமபுரியில் கொடூரத்தின் உச்சம்!

பாலக்கோடையை சேர்ந்த பெண்ணுக்கு (23) தருமபுரியை சேர்ந்த அய்யப்பன் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கணவரை பிரிந்து வாழ்ந்த இவர் தனது பெண் குழந்தையோடு (3) அய்யப்பனுடன் வசித்து வந்தார். ஆனால் அய்யப்பன் குழந்தையின் உடலில் சிகரெட்டால் சூடு வைத்தும் இருவரையும் வீட்டுக்குள் பூட்டியும் கொடுமைபடுத்தி உள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 13, 2026
, அடுத்தடுத்து மூன்று கோவில்களில் கொள்ளை

இன்று காரிமங்கலம் அருகே பொம்மஅள்ளியில் மகாசக்தி மாரியம்மன் கோவில், சின்ன மாரியம்மன் கோவில் மற்றும் ஓம் சக்தி மாரியம்மன் கோவில்களில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு அம்மன் தங்க நகை, குத்துவிளக்கு உட்பட பூஜை பொருட்கள் மற்றும் காணிக்கை பணம் ஒரு லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா ஹார்ட் டிஸ்க் திருடப்பட்டுள்ளது. இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


