News October 20, 2025

சற்றுமுன்: அனைத்து பள்ளிகளுக்கும்…

image

அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பொதுத்தேர்வு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, காலாண்டு தேர்வில் குறைந்த மார்க் எடுத்த 10, +12-ம் வகுப்பு மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு பள்ளிநேரம் முடிந்த பிறகு, சிறப்பு வகுப்புகள் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. தீபாவளி விடுமுறைக்குபின் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News March 12, 2026

ஜனநாயகன் ஓடிடி உரிமம் ரத்தானதா?

image

சென்சார் சிக்கலால் விஜய்யின் ஜனநாயகன் ரிலீசில் தாமதம் நீடிக்கிறது. இந்நிலையில், படத்தின் ஓடிடி உரிமையை ₹120 கோடிக்கு வாங்கிய சம்பந்தப்பட்ட நிறுவனம், ஓடிடி ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டதாக தகவல் கசிந்துள்ளது. ஆனால், இதுபற்றி படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. இதனிடையே, அடுத்த வாரம் ரிவைஸிங் கமிட்டி, படத்தை பார்த்து சென்சார் சான்று வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 12, 2026

அரசு தேர்வு எழுத வந்த நாய்.. வைரல் PHOTO!

image

பிஹார் நீதிமன்ற பியூன் வேலைக்காக ராகேஷ் குமார், 2022-ல் விண்ணப்பித்துள்ளார். 4 வருட காத்திருப்பிற்கு பிறகு அவருக்கு வந்த ஹால்டிக்கெட்டில், அவரின் போட்டோவிற்கு பதிலாக நாயின் போட்டோ இடம்பெற்றிருந்தது. தேர்வு தேதி நெருங்கி வரும் சூழலில், இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என ராகேஷ் வருத்தம் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் அலட்சியத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

News March 12, 2026

கேஸ் சிலிண்டர்.. நாடு முழுவதும் புதிய உத்தரவு

image

கேஸ் சிலிண்டர் பதுக்கல், கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும், சிலிண்டர் விநியோக சூழல் குறித்து காவல்துறை மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் இருந்து தலைமைச் செயலர் அறிக்கை பெற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இருப்பதாக வதந்தி பரவுவதை தடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!