News October 20, 2025
வங்கிக் கணக்கில் ₹2,000 டெபாசிட்… வந்தது அப்டேட்

PM கிசான் உதவித்தொகையின் 21-வது தவணையான ₹2,000, தீபாவளிக்கு முன்பாக விவசாயிகள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், பணம் வராததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், அக்டோபர் இறுதியில் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் பணம் கிரெடிட் ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. வங்கிக் கணக்கின் KYC-யை அப்டேட் செய்யாதவர்கள், உடனே அப்டேட் செய்துவிடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
Similar News
News April 6, 2026
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. தேர்வு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை, நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு இன்று அந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று நடைபெறவிருந்த 1 – 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு வரும் 10-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று முதல் 5 நாள்கள் விடுமுறையாகும்.
News April 6, 2026
கூட்டணி கட்சிகளுக்கு டிமிக்கி கொடுத்ததா அதிமுக?

பாமகவுக்கு அதிக பலம் உள்ள தொகுதிகளைதான் அதிமுக ஒதுக்கியுள்ளதாக கே.பாலு கூறினார். வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ள தொகுதிகளை அதிமுக ஒதுக்கியிருப்பதாக எழும் விமர்சனத்துக்கு பதிலளித்த அவர், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிற எந்தவொரு கட்சியாவது இதுபோன்று கூறியிருக்கிறதா என கேட்டார். மேலும், திமுகவில் தான் அப்படி நடந்துள்ளதாக கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வருத்தப்படுவதாகவும் அவர் பேசினார்.
News April 6, 2026
சிவனின் எந்த மந்திரம் எப்போது கூறினால் முழு பலன்!

ஒரு மந்திரத்தை குறிப்பிட்ட நாள், நேரம், திதி, முறையில் சொல்லும் போது பலன் அதிகமாக கிடைக்கும் ✱‘ஓம் நம சிவாய’ பஞ்சாட்சர மந்திரத்தை பிரம்ம முகூர்த்தம்(காலை 4- 6 மணி வரை) உச்சரிப்பது நல்லது ✱மகா மிருத்யுஞ்சய மந்திரத்தை பிரம்ம முகூர்த்தத்தில் 11 முறை உச்சரிப்பது சக்தி வாய்ந்ததாகும் ✱ருத்ராஷ்டகம், சிவ தாண்டவம் மந்திரத்தை சிவராத்திரியன்று எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம். வேண்டுதல்கள் நிறைவேறும்.


