News October 20, 2025
கால்களால் உணவை சுவைக்கும் உயிரினம் எது தெரியுமா?

பலருக்கும் பிடித்த பட்டாம்பூச்சிகள் கால்களால் தான் உணவை சுவைக்கின்றன. பட்டாம்பூச்சிகளுக்கு கால்களில்தான் சுவை மொட்டுகள் உள்ளது. எனவே, அவை பூக்கள் (அ) பிற தாவரங்கள் மீது உட்காரும்போது கால்களை பயன்படுத்தி, உணவின் சுவையையும், ஊட்டச்சத்துகளையும் சுவைக்கிறது. இதன்பிறகுதான், தன்னுடைய நாக்கை பயன்படுத்தி உணவை உறிஞ்சி சாப்பிடுகின்றன. இயற்கையின் இந்த அற்புதத்தை அனைவரும் அறிய SHARE பண்ணுங்க.
Similar News
News October 21, 2025
காங்கிரஸ் தேசவிரோத கட்சி: தமிழிசை

காங்கிரஸ் தலைவர்களுக்கு நாட்டுப்பற்று இல்லை என்பதால் தான், வெளிநாட்டுக்கு சென்று இந்தியா குறித்து ராகுல் காந்தி தவறாக பேசி வருவதாக தமிழிசை விமர்சித்துள்ளார். காங்கிரஸ் தலைவர்களின் பேசும் எந்த கருத்தையும் மக்கள் மதிப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் தேசிய கட்சி அல்ல என கூறிய அவர், அது ஒரு தேசவிரோத கட்சி என்றும் கடுமையாக சாடியுள்ளார்.
News October 21, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News October 21, 2025
மச்சினனுக்கு அண்ணி கொடுத்த தண்டனை

உ.பி.,யில் 20 வயது இளைஞரின் அந்தரங்க உறுப்பு துண்டிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் என்ன தெரியுமா? அண்ணியின் தங்கையை காதலித்த இளைஞர் உமேஷ், பின்னர் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால், தன் தங்கை கவலையில் வாடுவதை பொறுக்க முடியாத அண்ணி மஞ்சு, தூங்கிக் கொண்டிருந்த உமேஷை சரமாரியாக குத்தியதுடன், அவரின் அந்தரங்க உறுப்பையும் துண்டித்தார். இளைஞர் தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார்.


