News April 17, 2024

நாயை ஏவி கடிக்க வைத்த 2 பேர் கைது

image

கெம்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(34). இவரது வீட்டின் அருகே ஜோஸ்வா ஜோசப் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது கடை முன் இருந்த குப்பையை மணிகண்டன் அகற்றக் கூறியதால் ஆத்திரமடைந்த ஜோஸ்வா ஜோசப் வீட்டில் வளர்க்கும் நாயை ஏவி மணிகண்டனை கடிக்க வைத்துள்ளார். இதில், காயமடைந்த மணிகண்டன் அளித்த புகாரில் ஜோஸ்வா ஜோசப் மற்றும் அவரது தந்தை தேவராஜை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News December 28, 2025

FLASH: உக்கடம் பாலத்திற்கு பெயர் வைத்த CM ஸ்டாலின்

image

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.28) கோவை உக்கடம் மேம்பாலத்திற்கு பாரத ரத்னா சி.சுப்பிரமணியம் பெயர் சூட்டப்படுவதாக அறிவித்தார். ஆத்துப்பாலம் முதல் உக்கடம் வரை 3.8 கிமீ நீளமுள்ள இந்த மேம்பாலம், முன்னாள் ஒன்றிய அமைச்சராக பசுமைப் புரட்சிக்கு அடித்தளமிட்ட சுப்பிரமணியத்தின் பெருமையை போற்றும் வகையில் பெயரிடப்படுவதாக தெரிவித்தார்.

News December 28, 2025

1.10 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ்

image

கோவை மாவட்டத்தில் அண்மையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது கடந்த ஜனவரியில் வெளியான வாக்காளர் பட்டியலில் 32,25,198 வாக்காளர்கள் இருந்தனர். அண்மையில் வெளியிடப்பட்ட பட்டியலில் 25,74,608 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பலர் தங்கள் விண்ணப்பங்களை முறையாக பூர்த்தி செய்யவில்லை. இதனை முறையாக பூர்த்தி செய்ய 1.10 லட்சம் வாக்காளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News December 28, 2025

கோவை: 10th/ ITI முடித்தால் ரயில்வேயில் உடனடி வேலை

image

ரயில்வேயில் காலியாகவுள்ள 22,000 “குரூப் டி” பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: 10th/ ITI. வயது வரம்பு: 18 – 33. தேர்வு முறை: கணினி வழி தேர்வு, உடற்தகுதி, மருத்துவ சோதனை. சம்பளம்: ரூ.18,000 முதல் வழங்கப்படுகிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 2026, ஜன., 21 முதல் பிப்., 20 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>இங்கே<<>> கிளிக் செய்யவும். (SHARE)

error: Content is protected !!