News October 20, 2025
தீபாவளி விடுமுறை.. மேலும் 3 நாள்களுக்கு HAPPY NEWS

தீபாவளி விடுமுறைக்கு ஊர்களுக்கு சென்றவர்கள் சிரமமின்றி பணியிடங்களுக்கு திரும்ப ஏதுவாக நாளை முதல் 3 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. சென்னை, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட நகரங்களில் இருந்து அக்.21 முதல் 23 வரை 15,129 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தீபாவளிக்கு சிறப்பு பஸ்கள் மூலம் சுமார் 10 லட்சம் பேர் ஊர்களுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 21, 2025
திருப்பத்தூர் அருகே பாம்பு கடித்து சிறுமி காயம்

ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமத்தை சேர்ந்தவர் யாமினி (17). இவர் இன்று எதிர்பாரா விதமாக கீழே கிடந்த பாம்பின் மீது மிதித்ததில், அந்த பாம்பு அவரது காலில் கடித்தது. இதையறிந்த அவரது குடும்பத்தினர், கடித்த பாம்பினை பையில் போட்டுகொண்டு, சிறுமியையும் அழைத்து கொண்டு ஜோலார்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர். அங்கு அந்த பாம்பை மருத்துவர்களிடம் காண்பித்து சிறுமிக்கு சிகிச்சை வழங்கினர்.
News October 21, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News October 21, 2025
மச்சினனுக்கு அண்ணி கொடுத்த தண்டனை

உ.பி.,யில் 20 வயது இளைஞரின் அந்தரங்க உறுப்பு துண்டிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் என்ன தெரியுமா? அண்ணியின் தங்கையை காதலித்த இளைஞர் உமேஷ், பின்னர் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால், தன் தங்கை கவலையில் வாடுவதை பொறுக்க முடியாத அண்ணி மஞ்சு, தூங்கிக் கொண்டிருந்த உமேஷை சரமாரியாக குத்தியதுடன், அவரின் அந்தரங்க உறுப்பையும் துண்டித்தார். இளைஞர் தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார்.


