News October 20, 2025
முதல்முறை முதலீட்டாளர்களே.. முகூர்த்த நேரம் குறிச்சாச்சு

பங்குச்சந்தையில் முதல்முறையாக முதலீடு செய்ய உள்ளீர்களா? தீபாவளியை ஒட்டி, முகூர்த்த நேரத்தில் தொடங்கினால், உங்கள் முதலீடு இரட்டிப்பாகும், பொருளாதார வளர்ச்சியும் காணலாம். இதன்படி, நாளை மதியம் 1:45 PM – 2:45 PM என்ற முகூர்த்த நேரத்தில், பங்குச்சந்தையில் உங்கள் முதலீட்டை தொடங்குங்கள். அதேநேரம், அக்.22 பங்குச்சந்தை விடுமுறை, அக்.23 முதல் வழக்கம்போல் பங்குச்சந்தை ஓபன் ஆகும்.
Similar News
News October 20, 2025
லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

ஓராண்டில் மட்டும் ரெப்போ வட்டி விகிதம் 1% வரை குறைந்ததால், கடன் வட்டி விகிதங்களை வங்கிகள் குறைத்து வருகின்றன. குறிப்பாக, இந்த மாதத்தில் பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி, IDBI வங்கி உள்ளிட்டவை கடனுக்கான MCLR விகிதங்களை 0.05% வரை குறைத்துள்ளன. அதனால், அந்த வங்கிகளில் வீடு, வாகன கடன் பெற்றவர்களின் EMI குறைந்துள்ளது. இது சிறிய தொகை என்றாலும், நீண்ட கால கடன் பெற்றவர்களுக்கு பலனாக அமையும். SHARE IT.
News October 20, 2025
Sports 360°: டேக்வாண்டோவில் இந்தியாவுக்கு வெண்கலம்

*பால்கன் ஓபன் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்பில், அமன் கடியான் வெண்கலம் வென்றுள்ளார். *நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20-ல் இங்கிலாந்து 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. *ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. *US ஓபன் ஸ்குவாஷில், இந்தியாவின் அபய் சிங் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்.
News October 20, 2025
கரூர் துயரம்போல் கர்நாடகாவில் ஒரு சம்பவம்

கரூரில் நடந்ததைபோல் கர்நாடகாவில் CM சித்தராமையா பங்கேற்ற நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. புத்தூர் பகுதியில் நடைபெற்ற தீபாவளி நிகழ்ச்சியில் குழந்தைகள், பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 20,000 பேர் மட்டுமே பிடிக்கக் கூடிய இடத்தில், சுமார் 1 லட்சம் பேர் திரண்டதே நெரிசலுக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.