News October 20, 2025
தீபாவளி நாளில் அண்ணாமலை வைத்த கோரிக்கை

எத்திக்கும் இருள் அகன்று, ஒளி பெருகித் தித்திக்கும் தீபாவளி திருநாளில் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் என்று X-ல் அண்ணாமலை தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நன்னாளில் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகி நிறைந்திட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் என்று வாழ்த்திய அவர், அனைவரும் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் தீபாவளியை கொண்டாட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
Similar News
News October 20, 2025
வங்கிக் கணக்கில் ₹2,000 டெபாசிட்… வந்தது அப்டேட்

PM கிசான் உதவித்தொகையின் 21-வது தவணையான ₹2,000, தீபாவளிக்கு முன்பாக விவசாயிகள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், பணம் வராததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், அக்டோபர் இறுதியில் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் பணம் கிரெடிட் ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. வங்கிக் கணக்கின் KYC-யை அப்டேட் செய்யாதவர்கள், உடனே அப்டேட் செய்துவிடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
News October 20, 2025
அண்ணியை மனைவியாக்கும் விசித்திர வழக்கம்!

இமாச்சலில் உள்ள டிரான்ஸ்கிரி பகுதியில் வசிக்கும் ‘ஹட்டி’ என்ற பழங்குடியின மக்கள் மத்தியில் ஒரு விசித்திரமான வழக்கம் உள்ளது. அதாவது, அச்சமூகத்தை சேர்ந்த ஆணுக்கு திருமணம் முடிந்ததுமே அவனது சகோதரர்கள் எத்தனை பேர் இருந்தாலும், அவர்களுக்கும் அப்பெண் மனைவியாகி விட வேண்டுமாம். வறுமையும், சொத்து பிரிந்துவிடக் கூடாது போன்ற காரணங்களுக்காக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்த காலத்திலுமா இப்படி?
News October 20, 2025
PM மோடி பங்கேற்ற ’Bara Khana’ விருந்து பற்றி தெரியுமா?

தீபாவளியையொட்டி கப்பற்படை வீரர்களுடன் கிராண்டான விருந்தில் பங்கேற்றார் PM மோடி. INS விக்ராந்தில் ஆண்டுக்கு ஒரு முறை கப்பற்படை வீரர்கள் அனைவரும் சரிசமமாக அமர்ந்து ‘Bara Khana’ என்ற விருந்தில் பங்கேற்கின்றனர். சகோதரத்துவத்தை வலுப்படுத்தும் இந்நிகழ்ச்சியில், கப்பற்படையின் சாதனைகள் பற்றியும் பேசப்படுகிறது. இதில் பங்கேற்ற PM மோடி, தன்னுடன் துணிச்சலான கப்பற்படை வீரர்கள் உள்ளதாக புகழ்ந்தார்.