News October 20, 2025
ஒரே ஆண்டில் ₹50,000 வரை விலை உயர்ந்த ஜரிகை!

தங்கம், வெள்ளியை தொடர்ந்து பட்டு சேலைகள் சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறியுள்ளது. ஜரிகை உற்பத்திக்கு, தங்கமும், வெள்ளியும் முக்கிய மூலப்பொருட்களாக உள்ளன. எனவே, ஜரிகையின் விலையும் ஒரே ஆண்டில் ₹50,000 வரை உயர்ந்துள்ளது. கடந்தாண்டு ஏப்ரலில் ₹85,000-மாக இருந்த 1 கிலோ ஜரிகையின் விலை, தற்போது ₹1.35 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த தீபாவளிக்கு நீங்க பட்டு சேலை வாங்குனீங்களா?
Similar News
News March 12, 2026
பிரபல இளம் நடிகர் ஹரி முரளி காலமானார்

‘ரசிகன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மலையாள சினிமாவில் பிரபலமடைந்த நடிகர் ஹரி முரளி(27) தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ‘அண்ணன் தம்பி’, ‘பட்டணத்தில் பூதம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர் VFX கலைஞராகவும் பணிபுரிந்து வந்தார். ஹரி முரளியின் திடீர் மரணம் மலையாள சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
News March 12, 2026
மீண்டும் 100 டாலரை கடந்த கச்சா எண்ணெய்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு $100ஐ தாண்டியுள்ளது. போர் தொடங்கிய பிறகு $120ஐ எட்டியிருந்த விலை, பதற்றம் முடிவுக்கு வந்ததாக டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து சமீபத்தில் $89 ஆக குறைந்தது. கச்சா எண்ணெய் பேரல் $130 வரை அதிகரித்தாலும், நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயராது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
News March 12, 2026
சிலிண்டர் தட்டுப்பாடு.. கலெக்டர்களுடன் மீட்டிங்

சிலிண்டர் தட்டுபாடு எதிரொலியாக இன்று மாலை 4 மணிக்கு மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் முருகானந்தம் ஆலோசனை நடத்துகிறார். மாவட்ட வாரியாக சிலிண்டர் கையிருப்பு மற்றும் தேவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக மாநிலம் முழுவதும் பெரும்பாலான ஹோட்டல்கள் மூடப்பட்ட நிலையில், வீட்டு கேஸ் சிலிண்டருக்கும் தட்டுப்பாடு ஏற்படுமோ என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.


