News April 17, 2024
நீலகிரி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

நீலகிரி கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில், “மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் இன்று (ஏப். 17) மாலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் தேர்தல் தொடர்பான எந்தவிதமான பொதுக்கூட்டங்கள், பேரணி நடத்தவோ, பங்கேற்கவோ கூடாது. மேலும் தேர்தல் தொடர்பான விஷயத்தை திரைப்படங்கள் மூலமாகவோ, டிவி மூலமாகவோ காட்சிப்படுத்தக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News September 20, 2025
ஊட்டியில் திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு!

நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம்.ராஜு வெளியிட்ட செய்தி குறிப்பில்; நாளை ஓரணியில் தமிழ்நாடு நிகழ்ச்சிக்கான மாபெரும் பொதுக்கூட்டம் உதகை ஏடிசி ஜீப் நிறுத்தம் முன்பு மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா சிறப்புரை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் திமுக நிர்வாகிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.
News September 19, 2025
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

ஊட்டி பிங்கர் போஸ்ட் அருகே உள்ள நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
News September 19, 2025
தூய்மை பணியை மேற்கொள்ள ஆட்சியர் உறுதிமொழி!

தூய்மை மிஷின் 2.0 திட்டத்தின் கீழ் தூய்மை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., பல்வேறு அலுவலகங்களில் அந்தந்த துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் தூய்மை பணியில் மேற்கொள்ள வேண்டும், என அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.