News October 20, 2025
திருச்சி: நூலிழையில் உயிர் தப்பிய நபர்

திருச்சி மாநகரில் இயக்கப்படும் தனியார் டவுன் பேருந்துகள், நகர் பகுதியில் அதிவேகமாக செல்லும் காரணத்தால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றது. இதனை கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், காந்தி மார்கெட்டில் இருந்து பாலக்கரை நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று காஜாமொய்தீன் வீதி சந்திப்பு பகுதியில் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ஸ்கூட்டரை ஓட்டி வந்த நபர் நூலிழையில் உயிர்தப்பினார்.
Similar News
News October 20, 2025
திருச்சி: கடும் விலை உயர்வு!

தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சியில் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட்டில் நேற்று 1 கிலோ மல்லிகை பூ ரூ.3,000-க்கும், முல்லைப் பூ ரூ.3,000-க்கும், ஜாதிப் பூ ரூ.2,000-க்கும், செவ்வந்தி பூ ரூ.1000-க்கும் விற்பனையானது. இதனால் மார்க்கெட்டில் பூ வாங்க பொதுமக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். பூக்களின் வரத்து குறைவே விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
News October 20, 2025
திருச்சி: 1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News October 20, 2025
திருச்சி: மின்சாரம் தாக்கி லைன்மேன் பலி

லால்குடி அடுத்த காட்டூரை சேர்ந்தவர் கதிரவன் (37). இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வெள்ளனூர் துணை மின் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இவர், நேற்று காலை புதூர் உத்தமனூர் அருகே உயர் மின் அழுத்த பாதையில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசிப்பட்டார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.