News October 20, 2025
₹1 கோடி சம்பளம் வாங்கிய முதல் ஹீரோ இவரா?

இந்திய சினிமா இன்று பெரும் வளர்ச்சி கண்டுள்ள நிலையில், நடிகர்கள் கோடிகளில் சம்பளத்தை அள்ளுகின்றன. ஆனால் இந்தியாவில் முதன்முதலில் கோடியில் சம்பளம் வாங்கிய நடிகர் யார் தெரியுமா? தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்த சிரஞ்சிவிதான், முதலில் ₹1கோடி வாங்கி அமிதாப், ரஜினி உள்ளிட்ட நடிகர்களை பின்னுக்கு தள்ளினார். ஆபத்பந்தவுடு(1992) என்ற படத்திற்காக, சிரஞ்சீவி ₹1.25 கோடி சம்பளம் வாங்கினார்.
Similar News
News March 19, 2026
அதிமுக கூட்டணிக்கு நோ… விஜய்க்கு என்ன பலன்?

அதிமுக கூட்டணிக்கு விஜய் No சொன்னதால் இதெல்லாம் சாதகமாம்: *40 சீட்டுகள் வென்று து.முதல்வர் ஆனாலும், நீண்டகால நோக்கில் கட்சியை வளர்க்க அது உதவாது *கொள்கை எதிரி பாஜக, ஊழல் கட்சி அதிமுக என மேடையில் பேசியதை உறுதிப்படுத்தும் *தனித்து சீட்களை வெல்ல முடியாவிட்டாலும் கணிசமான வாக்குகள் பெறலாம் *தவெகவின் பலத்தை காட்டிவிட்டால், அடுத்தமுறை கட்சிகளை கூட்டணிக்கு கொண்டு வருவது ஈஸி. நீங்கள் என்ன சொல்றீங்க?
News March 19, 2026
தமிழக அதிகாரிகள் மாற்றம்: Ex கவர்னர் ரவி காரணமா?

முக்கிய அதிகாரிகளை ECI அவ்வப்போது பணியிடமாற்றம் செய்து வருகிறது. இதன் பின்னணியில் Ex TN கவர்னர் RN ரவி கொடுத்த லிஸ்ட் உள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 3 மாதங்களாக ஆய்வு செய்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளின் பட்டியலை டெல்லி தலைமையிடம் அவர் கொடுத்துள்ளாராம். அதிகாரிகள் மாற்றம் தொடர்பாக நயினார், அண்ணாமலை போன்றவர்களிடமும் ஆலோசிக்கும் மத்திய உள்துறை அதன்படி ECI-க்கு பரிந்துரைக்கிறதாம்.
News March 19, 2026
ஜன நாயகன் படம் ரிலீஸ்.. வெளியான புது அப்டேட்

‘ஜன நாயகன்’ படம் ரிலீஸ் குறித்து தலைமை தேர்தல் ஆணையம்தான் விளக்கமளிக்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக படத்தை வெளியிட தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலை பெற வேண்டுமா என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு ‘ஜன நாயகன்’ படத்தை சென்சார் போர்டு மறு ஆய்வு செய்துள்ளது. தற்போது தேர்தல் ஆணையத்தின் ஒப்பதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


