News October 19, 2025

தீபாவளிக்கு எந்த எண்ணெயில் விளக்கு ஏற்றுவது?

image

தீபாவளி அன்று நிறைய விளக்குகளை ஏற்றி, அவற்றின் ஒளி மூலம் இறைவனை வழிபட்டால் பல நன்மைகள் கிடைக்கும். அதன்படி எந்த எண்ணெயில் விளக்கு ஏற்ற வேண்டும் என்று தெரியுமா? பசு நெய்யில் விளக்கு ஏற்றினால் வீட்டில் செல்வம் சேரும், நல்லெண்ணெய் பயன்படுத்தினால் எல்லா வித பீடைகளும் விலகும், விளக்கு எண்ணெய் பயன்படுத்தினால் தாம்பத்ய சுகம் கிடைக்குமாம். இதில் குறிப்பாக கடலை எண்ணெயில் தீபம் ஏற்றவே கூடாது.

Similar News

News October 20, 2025

₹1 கோடி சம்பளம் வாங்கிய முதல் ஹீரோ இவரா?

image

இந்திய சினிமா இன்று பெரும் வளர்ச்சி கண்டுள்ள நிலையில், நடிகர்கள் கோடிகளில் சம்பளத்தை அள்ளுகின்றன. ஆனால் இந்தியாவில் முதன்முதலில் கோடியில் சம்பளம் வாங்கிய நடிகர் யார் தெரியுமா? தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்த சிரஞ்சிவிதான், முதலில் ₹1கோடி வாங்கி அமிதாப், ரஜினி உள்ளிட்ட நடிகர்களை பின்னுக்கு தள்ளினார். ஆபத்பந்தவுடு(1992) என்ற படத்திற்காக, சிரஞ்சீவி ₹1.25 கோடி சம்பளம் வாங்கினார்.

News October 20, 2025

இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்!

image

தீப ஒளித் திருநாளில் நண்பர்கள், குடும்ப உறவுகளுக்கு வாழ்த்துகளை தவறாமல் பகிருங்கள். *மத்தாப்பு போல மனம் மகிழட்டும், பட்டாசு போல துன்பம் சிதறட்டும்.. இனிவரும் நாளெல்லாம் வாழ்வில் இன்ப ஒளி பரவட்டும். *அனைவர் வாழ்விலும் இருள் நீங்கி ஒளி பிறக்கவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விடவும் தீபாவளி வாழ்த்துகள். *அறியாமை இருள் நீங்கி அறிவுச் சுடரொளி பரவட்டும்! இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

News October 20, 2025

பிஹாரில் 24-ம் தேதி பரப்புரையை தொடங்கும் மோடி

image

பிஹார் மாநிலத்தில் 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. கூட்டணியில் உள்ள பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சிகள் இரண்டும் தலா 101 இடங்களில் போட்டியிடுகின்றன. இந்நிலையில், பிஹார் சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரத்தை PM மோடி வரும் 24-ம் தேதி தொடங்குகிறார். இந்த மாத இறுதிக்குள் 4 பிரச்சாரப் பேரணிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!