News October 19, 2025

இந்தியாவின் முதல் Antibiotic மருந்து!

image

சுவாச நோய்த்தொற்றுகளுக்கு எதிராக பயன்படும் ‘Nafithromycin’ என்ற Antibiotic, முதல் முறையாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். இது, புற்றுநோயாளிகள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மருந்தை Wockhardt என்ற தனியார் மருந்து நிறுவனத்துடன் இணைந்து, அரசின் BIRAC ஆராய்ச்சி கவுன்சில் உருவாக்கியுள்ளது.

Similar News

News March 11, 2026

போர் எதிரொலி.. தீப்பெட்டி விலை உயர்ந்தது

image

தீப்பெட்டி தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளான Paraffin Wax-ஐ (மெழுகு) ஈரானிடம் இருந்து இந்தியா அதிகளவில் வாங்கி வந்தது. போர் காரணமாக ஈரானில் இருந்து இந்தியாவிற்கு மெழுகை இறக்குமதி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், அதன் விலை ஒரு கிலோவுக்கு ₹80-ல் இருந்து ₹130 ஆக உயர்ந்துள்ளது. இதனால், கோவில்பட்டியில் உற்பத்தியாகும் தீப்பெட்டி பண்டல் ஒன்றின் விலை ₹20 ஆக உயர்ந்துள்ளது.

News March 11, 2026

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் அதிகரிக்கும் விறகு விலை

image

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் பல சிறு ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. பல பகுதிகளில் விறகு அடுப்பில் சமைப்பதையும் பார்க்க முடிகிறது. இந்நிலையில், விறகு விலையும் டபுள் மடங்காக அதிகரித்துள்ளது. சராசரியாக நாளொன்றுக்கு 1 டன் விற்கப்பட்ட விறகு, தற்போது 10 டன் வரை விற்கப்படுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இதனால், விறகு தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்புள்ளதாம். உங்க பகுதியில் எப்படி?

News March 11, 2026

CSK-வில் ரெய்னா? அணியின் CEO அப்டேட்

image

ஐபிஎல் சீசன் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், CSK-வின் பேட்டிங் அல்லது பீல்டிங் பயிற்சியாளராக ரெய்னா நியமிக்கப்படவுள்ளார் என தகவல் கசிந்தது. ஆனால், இது ஒரு வதந்தி என மறுத்துள்ள அணியின் CEO காசி விஸ்வநாதன், பயிற்சியாளராக ரெய்னா நியமிக்கப்படவில்லை என கூறியுள்ளார். CSK-வில் இணைய ரெய்னா விருப்பம் தெரிவித்தும், அவரை அணி நிர்வாகம் சேர்க்காததால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

error: Content is protected !!