News October 19, 2025

சிவகங்கைக்கு நாளை மஞ்சள் எச்சரிக்கை.!

image

மன்னார் வளைகுடா மற்றும் அதைன ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. குறிப்பாக சிவகங்கையில் நாளை (அக்.20) தீபாவளியன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

Similar News

News October 19, 2025

சிவகங்கை: தீபாவளிக்கு காவல்துறை அறிவுறுத்தல்

image

சிவகங்கை மாவட்ட காவல் துறை அறிவுறுத்தலில், தீபாவளி கொண்டாட்டத்தில் பாதுகாப்பை பின்பற்றுங்கள், அதிக ஒலி பட்டாசுகளை தவிர்க்கவும், குழந்தைகள் பெரியவர்களுடன் மட்டுமே வெடிக்கவும், மின் வயர்கள் இல்லாத இடங்களில் வெடிக்கவும், அரசு அனுமதித்த நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவும். பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுங்கள் எனவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது‌.

News October 19, 2025

சிவகங்கை: தவறவிட்ட பண பையை ஒப்படைத்த போலீசார்

image

தேவகோட்டை டைலர் கடை வைத்திருக்கும் வள்ளி என்ற பெண்மணி தீபாவளி திருநாளுக்கு பொருட்கள் வாங்க தேவகோட்டை பஸ் நிலையம் அருகே வரும்பொழுது அவர் வைத்திருந்த கட்டப் கீழே விழுந்தது அதில் 15000 மதிப்புள்ள செல்போன் மற்றும் ரொக்க பணம் 3000 ரூபாய் இருந்தது போக்குவரத்து பணிகள் இருந்தார் காவலர்கள் யோகராஜ் மற்றும் கௌதம் இதை எடுத்து அந்த பெண்மணியை அழைத்து அவரிடம் ஒப்படைத்தனர்.

News October 19, 2025

சிங்கம்புணரியில் விபத்து அபாயம்

image

சிங்கம்புணரி: மதுராபுரி ஊராட்சியில் கோபாலபச்சேரி வழியாக பிரான்மலை செல்லும் ராமகரண் ஊருணி அருகே கட்டப்பட்ட தடுப்புச் சுவர் இடிந்து சாலை கரையத் தொடங்கியுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த ஊருணி மக்களுக்கு முக்கிய குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரமாக செயல்படுகிறது. பெய்த மழை காரணமாக சுவர் இடிந்து, அருகேயுள்ள தார் சாலை பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது.

error: Content is protected !!