News October 19, 2025
BREAKING: 1 கிலோ ₹3,000 வரை உயர்ந்தது

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக 1 கிலோ மல்லிகை ₹3,000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், முல்லை ₹2,500, சாதிப்பூ ₹2,000, காக்கரட்டன் ₹1,500, அரளிப்பூ ₹400, பன்னீர் ரோஸ், சம்பங்கி ஆகியவை தலா ₹200 வரை விற்கப்படுகிறது. தீபாவளிக்கு பின் விலை படிப்படியாக குறையும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். நீங்க எவ்வளவுக்கு பூ வாங்குனீங்க?
Similar News
News March 14, 2026
போர் பதற்றம்.. 5 இந்தியர்கள் பலி

ஓமானின் சோஹர் தொழில்துறை பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானத்தின் இடிபாடுகளில் சிக்கி 2 இந்தியர்கள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் 10 இந்தியர்கள் காயமடைந்தனர். அதேபோல், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த போரில் இதுவரை 5 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
News March 14, 2026
SPORTS 360°: ஹாக்கியில் இந்தியா அபாரம்

*KKR அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானுக்கு பதிலாக ZIM வீரர் பிளெஸ்ஸிங் முசரபானி சேர்ப்பு *காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து ஹர்ஷித் ராணா விலகல் *மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை குவாலிஃபையர்ஸில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது *காயம் காரணமாக சுவிஸ் ஓபன் பேட்மிண்டனில் இருந்து சாத்விக்-சிராக் இணை விலகல் *வங்கதேசத்திற்கு எதிரான 2-வது ODI-ல் பாகிஸ்தான் 128 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
News March 14, 2026
ராசி பலன்கள் (14.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!


