News October 19, 2025
BREAKING: 1 கிலோ ₹3,000 வரை உயர்ந்தது

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக 1 கிலோ மல்லிகை ₹3,000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், முல்லை ₹2,500, சாதிப்பூ ₹2,000, காக்கரட்டன் ₹1,500, அரளிப்பூ ₹400, பன்னீர் ரோஸ், சம்பங்கி ஆகியவை தலா ₹200 வரை விற்கப்படுகிறது. தீபாவளிக்கு பின் விலை படிப்படியாக குறையும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். நீங்க எவ்வளவுக்கு பூ வாங்குனீங்க?
Similar News
News March 13, 2026
பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் உயர்வு

பத்திரிகையாளர்களின் ஓய்வூதியத்தை மேலும் ₹3,000 உயர்த்தி CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கெனவே ₹12,000 வழங்கிவரும் நிலையில், தற்போது 15,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கீகார அடையாள அட்டை உள்ளவர்களுக்கு விரிவான மருத்துவ காப்பீடு வழங்கப்படும் எனவும், வீட்டு வசதி வாரியத்தில் பத்திரிகையாளர்களுக்கு மனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
News March 13, 2026
ஜெ.வின் மறைவுக்கு பிறகு..

Ex CM ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களும், விலகியவர்களும் அரை டஜனுக்கு மேல் இயக்கங்கள், கட்சிகளை தொடங்கியுள்ளனர். பண்ருட்டி ராமசந்திரன், பெங்களூரு புகழேந்தியை தொடர்ந்து சசிகலாவும் தனி இயக்கம் கண்டுள்ளார். MGR-ஐ பின்பற்றி தொண்டர் ஒருவர் தொடங்கிய கட்சியில் (அஇபுதமமுக) இணைந்துள்ளார். அந்த இயக்கங்கள் & கட்சிகளின் விவரங்களை SWIPE செய்து பார்க்கவும்.
News March 13, 2026
56 வயதில் 22 மனைவிகள்.. பலே ஆசாமி

கேரளாவில் நகைப் பறிப்பில் ஈடுபட்ட பாகுலேயன்(56) என்பவர் போலீசிடம் சிக்கியபோது, அவர் 22 பெண்களை திருமணம் செய்து மோசடி மன்னனாக வாழ்ந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருவரை திருமணம் செய்திருந்த பாகுலேயன், மனைவிகளுக்கு நகை வாங்கி கொடுத்து திருப்திப்படுத்த திருட்டில் ஈடுபட்டராம். பல பெயர்களில் பல பெண்களை ஏமாற்றி அவர் திருமணம் செய்திருப்பது தெரியவந்துள்ளது. இவரை என்ன சொல்வது?


