News October 19, 2025

திருவள்ளூருக்கு ஆரஞ்ச் அலெர்ட்

image

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வரும் அக்.23ஆம் தேதி திருவள்ளூருக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மேலும், தீபாவளி மறுதினம் கனமழை பெய்யும் எனவும், 22, 24ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே. ஷேர் பண்ணுங்க.

Similar News

News March 6, 2026

திருத்தணியில் அதிரடி கைது!

image

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா உத்தரவின் பேரில், போலீசார் திருத்தணி ரயில் நிலையத்தில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, 190 போதை மாத்திரைகளை கடத்தி வந்த அரக்கோணம் தாலுக்கா, தணிகைப் போரூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (21) என்பவரைப் போலீசார் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து அவரைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்த போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்து அவரைச் சிறையில் அடைத்தனர்.

News March 6, 2026

திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.06) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 5, 2026

திருவள்ளூரில் கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல்

image

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் திருநின்றவூர் அடுத்த பட்டரவாக்கம் ரயில் நிலையம் அருகில் கண்காணிப்பு பணியில் இன்று ஈடுபட்டிருந்தார். அப்போது 32 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த Tengchak Bargish ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

error: Content is protected !!