News October 19, 2025
திருவள்ளூர்: 29,000 சம்பளத்தில் ரயில்வேயில் வேலை!

ரயில்வே துறையின் கீழ் இயங்கும் RITES நிறுவனத்தில் காலியாக உள்ள 600 Senior Technical Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேதியியலில் B.Sc, சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கெமிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் முழுநேர டிப்ளமோ முடித்த 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் மாதம் ரூ.29,735/வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ-12குள் <
Similar News
News October 19, 2025
BREAKING ஆவடி அருகே வெடி விபத்து: 4 பேர் பலி

ஆவடியில் வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடி வெடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் திருநின்றவூரைச் சேர்ந்த யாசின், சுனில் ஆகிய 2 பேர் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 2 பேர் பட்டாசு வாங்க வந்தவர்கள் என தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டள்ளனர். இவ்வெடி விபத்தில் வீடு முழுவதும் சேதம் அடைந்துள்ளது.
News October 19, 2025
திருவள்ளூருக்கு ஆரஞ்ச் அலெர்ட்

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வரும் அக்.23ஆம் தேதி திருவள்ளூருக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மேலும், தீபாவளி மறுதினம் கனமழை பெய்யும் எனவும், 22, 24ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே. ஷேர் பண்ணுங்க.
News October 19, 2025
திருவள்ளூர்: குடிபோதையில் மகளுக்கு பாலியல் தொல்லை!

குடிபோதையில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போலீசார் போக்சோவில் கைது செய்தனர் . பள்ளிப்பட்டு அருகே அத்திமஞ்சரிபேட்டியை சேர்ந்த சுப்பிரமணி குடிபோதையில் சொந்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து புகாரின் அடிப்படையில் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் குழுவினர் அவரை கைது செய்தனர்.