News October 19, 2025
படகு விபத்தில் பலியான 3 இந்தியர்கள், 5 பேர் மாயம்

மொசாம்பிக் நாட்டில் உள்ள பெய்ரா துறைமுக பகுதியில், ஊழியர்கள் சென்று கொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 14 இந்தியர்கள் இருந்த நிலையில் 3 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காணாமல் போன நிலையில், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விபத்தில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் பெய்ரா நகரில் உள்ள ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருவதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News October 19, 2025
பட்டா, சிட்டா ஆவணம்.. தமிழக அரசு புதிய வசதி

இறந்தவர்களின் பெயர்களை பட்டாவில் இருந்து நீக்குவதற்கும், புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்கவும், அண்மையில் புதிய வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் A TN nilam citizen portal மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். SHARE IT.
News October 19, 2025
கைது செய்யப்படுவாரா இஸ்ரேல் PM நெதன்யாகு?

இஸ்ரேல் PM நெதன்யாகுவுக்கு எதிரான கைது வாரண்ட்டை ரத்து செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மறுத்துள்ளது. காஸா போர் தொடர்பான போர் குற்றங்களுக்காக இஸ்ரேல் PM நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் ஆகியோருக்கு எதிராக ICC கைது வாரண்ட்களை பிறப்பித்தது. இதை ரத்து செய்யக்கோரி 2-வது முறையாக இஸ்ரேல் அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ICC நிராகரித்துள்ளது.
News October 19, 2025
உலகின் 6 அதிசயமான மர்ம இடங்கள்

நீர் நிறமற்றது, காற்று மணமற்றது உள்ளிட்ட இயற்கை நிகழ்வுகள் எப்போதும் இயற்கையாகவே இருக்கும். ஆனால், சில விஷயங்கள் இயற்கைக்கு மாறாக செயல்பட்டாலும், அவையும் நம்மோடே இருக்கின்றன. இவை கட்டுக்கதைகள் அல்ல, NASA உள்ளிட்ட விஞ்ஞான தளங்களால் நிரூபிக்கபட்டவை. இவ்வாறான இயற்கைக்கு எதிராக இருக்கும் இடங்களை மேலே swipe செய்து பாருங்கள். நீங்கள் பார்த்த, ரசித்த, அறிந்த இதுபோன்ற இடங்களை கமெண்ட்டில் சொல்லுங்கள்.