News October 19, 2025
மகளிர் உரிமைத்தொகை ₹1000 .. வெளியானது ஹேப்பி நியூஸ்

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்த பெண்களுக்கு டிச.15 முதல் ₹1000 வழங்கப்படும் என உதயநிதி அண்மையில் அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து கிராம வாரியாக பயனாளிகளின் எண்ணிக்கை & விவரங்களை கிராம நிர்வாக அலுவலர்கள் இறுதி செய்ய தொடங்கியுள்ளனர். இதுவரை 28 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்துள்ளனர். இதில், தகுதியான பெண்களின் லிஸ்ட் ரெடியாகி வருவதாக கூறப்படுகிறது.
Similar News
News October 19, 2025
பிரபல நடிகை அம்மா ஆனார் ❤️❤️

பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. டெல்லி தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, குழந்தை பிறந்த செய்தியை கணவரும் ஆம் ஆத்மி எம்.பி.யுமான ராகவ் சத்தா தெரிவித்துள்ளார். 2023-ஆம் ஆண்டு மண வாழ்க்கைக்குள் நுழைந்த இந்த தம்பதி, தற்போது பெற்றோர் என்ற பொறுப்புக்குள் அடியெடுத்து வைக்கின்றனர். இவர்களுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.
News October 19, 2025
தீபாவளியில் இந்த தவறுகளை பண்ணாதீங்க!

இருளின் மீது ஒளியும், அறியாமையின் மீது அறிவும் படரும் பண்டிகையே தீபாவளி. அன்று இந்த தவறுகளை செய்யக் கூடாது: *வீட்டில் எந்த இடத்திலும் இருள் சூழக் கூடாது *தீபாவளிக்கு அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடித்து முதியவர்கள், உடல்நலம் பாதித்தவர்களையும் தொந்தரவு செய்ய வேண்டாம் *அதேபோல் எந்த விலங்கையும், குறிப்பாக பட்டாசு சத்தத்தால் பயப்படும் விலங்குகளை துன்புறுத்தக்கூடாது.
News October 19, 2025
ரஜினி வழியில் விஜய்?

நான் தான் ஹீரோ என நானே கூறிக்கொண்டே இருக்கக்கூடாது, என்னை பற்றி பிறர் பேசினாலே நான் ஹீரோ என ரஜினி கூறியிருப்பார். விஜய் வீட்டுக்குள்ளேயே உள்ள நிலையில், அவரை பற்றி அரசியல் தலைவர்கள், கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வரை அனைவரும் பேசுகின்றனர். சினிமாவில் ஹீரோவாக ஜொலிப்பதை போலவே, அரசியலிலும் அவ்வப்போது வெளியே வந்தால் போதும் ஜெயித்துவிடலாம் என்பது முடியாத ஒன்று என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.