News October 19, 2025

FLASH: சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

image

நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக, சீமான் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்தாண்டு நவ. மாதம் யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய சீமான், நீதிமன்ற செயல்பாடுகளை ஆபாச வார்த்தைகளால் பேசியதாக கூறி சார்லஸ் அலெக்சாண்டர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் மீது, எழும்பூர் கோர்ட் உத்தரவின் அடிப்படையில், திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Similar News

News March 12, 2026

அதிக உயிரிழப்புகள்.. இந்த விலங்குதான் டாப்பு!

image

சராசரியாக உலகளவில் ஆண்டுதோறும், மனித இறப்புகளுக்கு காரணமாக இருக்கும் விலங்குகளின் பட்டியலை WHO மற்று BBC Science Focus இணைந்து வெளியிட்டுள்ளன. இந்த அதிர்ச்சியூட்டும் பட்டியலில், நாம் நினைத்து பார்க்காத விலங்குகள் இடம்பிடித்துள்ளன. எந்த உயிரினத்தால், எவ்வளவு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்பதை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News March 12, 2026

பணிப்பெண்ணிடம் தவறாக நடக்கவில்லை: பாக். வீரர்

image

இலங்கையில் <<19302700>>ஹோட்டல் பணிப்பெண்ணிடம்<<>> தவறாக நடந்து கொண்டதாக வெளியான தகவலை பாகிஸ்தான் வீரர் சல்மான் மிர்சா மறுத்துள்ளார். மேலும், தவறான செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், தவறாக செய்தி வெளியிட்ட பாக். ஊடகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். T20 உலகக் கோப்பை தொடரின் போது நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

News March 12, 2026

BREAKING: வீட்டு சிலிண்டர்.. மக்களுக்கு மேலும் அதிர்ச்சி

image

கிராமப்புற மக்களுக்கு 45 நாள்களுக்கு ஒருமுறையே கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என மத்திய பெட்ரோலியத் துறை அறிவித்துள்ளது. அதேநேரம், நகர்ப்புறங்களில் 25 நாள்களுக்கு ஒரு சிலிண்டர் என்ற அடிப்படையில் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேஸ் தட்டுப்பாட்டை சமாளிக்க மாநிலங்களுக்கு கூடுதலாக 40,000 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!