News October 19, 2025

தஞ்சை: அரிவாளைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு

image

திருச்சியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்( 52). இவர் திருக்காட்டுப்பள்ளிக்கு சென்று விட்டு அங்கு உள்ள மதுக்கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நடுப்படுகை தெற்கு வாய்க்கால் கரை தெருவை சேர்ந்த குட்டி என்ற பிரவீன் (28), பாலகிருஷ்ணனை வழிமறித்து அரிவாளைக் காட்டி மிரட்டி அவர் கையில் இருந்த ரூ.500-ஐ பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரில் காவல்துறையினர் பிரவீனை கைது செய்தனர்.

Similar News

News October 19, 2025

தஞ்சை: இனிமேல் BANK-க்கு அலைய தேவையில்லை!

image

தஞ்சை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

News October 19, 2025

தஞ்சை: மழை பாதிப்புக்கு இதை தெரிஞ்சிக்கோங்க!

image

தஞ்சாவூரில் அநேக இடங்களில் அடைமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News October 19, 2025

தஞ்சை மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (அக்.19) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மின்னல் தாக்கும் நேரங்களில் மக்கள் திறந்தவெளி மற்றும் மரங்களின் கீழ் நிற்காமல் தவிர்ப்பது நல்லது.

error: Content is protected !!