News October 19, 2025
நாமக்கல்: கனமழை காரணமாக தடை அறிவிப்பு

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அங்குள்ள நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அருவிகளில் இருந்து வரும் வெள்ள நீர் அடிவாரப் பகுதியான புளியஞ்சோலை ஆற்றுப்பகுதியில் கலக்கிறது. தற்போது இந்த ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, கடந்த சில நாட்களாக அங்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 19, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை!

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று (அக்டோபர்-19) நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.25 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை (அக்டோபர்-20) முதல் முட்டையின் விலை ரூ.5.25 ஆகவே நீடிக்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
News October 19, 2025
நாமக்கல்: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!
News October 19, 2025
நாமக்கல் ரயில் பயணிகளுக்கு முக்கிய செய்தி!

நாமக்கலில் இருந்து இன்று இரவு 9:25 மணிக்கும், நள்ளிரவு 1:35 மணிக்கும், நாளை அதிகாலை 5:05 மணிக்கும் காட்பாடி, சென்னை போன்ற பகுதிகளுக்கு செல்ல ரயில்களில் டிக்கெட்டுகள் உள்ளன. எனவே, நாமக்கல், திருச்செங்கோடு, மோகனூர், பரமத்திவேலூர், புதுச்சத்திரம், சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, வேலகவுண்டம்பட்டி, தொட்டியம், எருமப்பட்டி, பவித்திரம் சுற்றுவட்டார பகுதி மக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.