News October 19, 2025
குமரி: வீட்டில் அழுகிய நிலையில் ஆண் சடலம்

கண்டன்விளை பெயிண்டர் அன்பழகன் என்ற அன்பு (54). இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வசித்து வந்தார். இவருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. நேற்று இவருக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க உறவினர் ஒருவர் சென்றபோது வீட்டில் நாற்காலியில் இறந்து அழுகிய நிலையில் இவர் காணப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார். தகவலின் பேரில் இரணியல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை.
Similar News
News October 21, 2025
குமரி: மீனவர்கள் திரும்ப நடவடிக்கை – நிர்மலா சீதராமன்

தேங்காய் பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 30 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் பத்திரமாக கரைத் திரும்ப அவர்களது சாட்டிலைட் போன் சேவை இணைப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் பத்திரமாக கரை திரும்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்துள்ளார்.
News October 21, 2025
குமரி: கேஸ் மானியம் பெற e-KYC முக்கியம் – APPLY!

குமரி மகக்ளே கேஸ் மானியம் வந்துகிட்டு இருந்தது வரலையா?? கேஸ் மானியம் பெறனுமா?? மத்திய அரசு e-KYC மூலம் ஆதார் எண் உங்கள் LPG கணக்குக்கும் இணைத்தவர்களுக்கு மட்டுமே கேஸ் மானியம் என நடைமுறை படுத்தி உள்ளது. கேஸ் மானியம் திரும்ப பெற வழி உண்டு! இங்கு <
News October 21, 2025
குமரி: சேட்டிலைட் போனில் பேசிய ஆட்சியர்

ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் பயன்படுத்தபடும் செயற்கைக்கோள் தொலைபேசிகளை ரீசார்ஜ் செய்ய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் நேற்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, ராஜேஷ்குமார் எம்எல்ஏ வள்ளவிளை பங்கு தந்தை , மீனவர் குடும்பத்தினரை வள்ளவிளையில் நேரில் சந்தித்து செயற்கைக்கோள் தொலைபேசி ரீசார்ஜ் செய்யப்பட்டுள்ளதை பேசி உறுதி செய்தனர்.மீனவர்கள் இக்கட்டான சூழலிலும் தெரியபடுத்த வாய்ப்பு உள்ளது.