News October 19, 2025
3 நாள்களில் 6.15 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு மக்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். கடந்த மூன்று நாள்களில் மட்டும் சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் மூலம் 6,15,992 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். நாளை தீபாவளி என்பதால் இன்று அதிகளவில் மக்கள் பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். இதனால், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News October 19, 2025
டெல்லியின் பெயரை மாற்ற கோரும் VHP

டெல்லியின் பெயரை ‘இந்திரபிரஸ்தம்’ (Indraprastha) என மாற்ற வலியுறுத்தி, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு, டெல்லி கலாசார துறை அமைச்சர் கபில் மிஷ்ராவுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதன் மூலம் தலைநகரை, அதன் பண்டைய வரலாறு & கலாசாரத்துடன் தொடர்புபடுத்த முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் ஏர்போர்ட், ரயில் நிலையத்தின் பெயரை மாற்றவும் VHP கோரியுள்ளது. டெல்லியில் பாஜக ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
News October 19, 2025
20 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்

மஞ்சள் அலர்ட்டால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று இரவு 10 மணி வரை, செங்கல்பட்டு, சென்னை, கோவை, திண்டுக்கல், காஞ்சி, குமரி, மதுரை, நாகை, புதுக்கோட்டை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், தி.மலை, விருதுநகரில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், தீபாவளி ஷாப்பிங் சென்றவர்கள் கவனமுடன் வீடு திரும்புங்க!
News October 19, 2025
நெல் கொள்முதலில் திமுக மீண்டும் நாடகம்: EPS

பருவமழைக்கு முன்பாக நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தியும், திமுக அரசு காதில் வாங்கவில்லை என்று EPS விமர்சித்துள்ளார். நேரடி நெல் கொள்முதலில் மீண்டும் மீண்டும் நாடகமாடும் ஸ்டாலின் அரசின் மோசமான நிர்வாகத்தால் டெல்டா விவசாயிகளுக்கு கண்ணீர் தீபாவளியாகவே உள்ளது என்றும் சாடியுள்ளார். மேலும், 22% ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் EPS, அரசை வலியுறுத்தியுள்ளார்.