News October 19, 2025
திருச்சி: மாங்காய் விற்ற முதியவர் மீது மோதிய அரசு பஸ்

திருச்சி இருங்களூர் கைகாட்டியில் சாலையோரம் நேற்று மாலை மாங்காய் விற்றுக்கொண்டிருந்த திருக்காட்டுப்பள்ளி பகுதியைச் சேர்ந்த முதியவர் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் முதியவருக்கு கால் எலும்பு முறிந்த நிலையில், அருகில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 14, 2026
திருச்சி: 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்தவர் வீரபாண்டி (75). இவர் லாரியில் தைலமரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு சிவகங்கையில் இருந்து மணப்பாறைக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் வெங்கட் நாயக்கன்பட்டி பிரிவு சாலை அருகே அவர் லாரியை திருப்ப முயன்ற போது, மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சிமெண்டு கெமிக்கல் ஏற்றிச் சென்ற லாரி, மரக்கட்டைகள் ஏற்றிய லாரி மீது மோதியது. இதில் இரு லாரிகளும் கவிழ்ந்தன.
News March 14, 2026
திருச்சி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை!

திருச்சி வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 24.11.2025 திங்கள்கிழமை அன்று மழையின் காரணமாக உள்ளுர் விடுமுறை விடப்பட்டது. அவ்விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக இன்று (14.03.2026) சனிக்கிழமையன்று, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் முழுவேலை நாளாக செயல்படும் என திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா அறிவித்துள்ளார்.
News March 14, 2026
திருச்சி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை!

திருச்சி வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 24.11.2025 திங்கள்கிழமை அன்று மழையின் காரணமாக உள்ளுர் விடுமுறை விடப்பட்டது. அவ்விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக இன்று (14.03.2026) சனிக்கிழமையன்று, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் முழுவேலை நாளாக செயல்படும் என திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா அறிவித்துள்ளார்.


