News October 19, 2025
திமுகவால் செய்யமுடியாததை EPS செய்துகாட்டினார்

தமிழக நலன் குறித்து அக்கறையில்லாமல் மத்திய அரசுடன் பகைமை பாராட்டுகிறது திமுக என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். சொத்துவரி, மின் கட்டண உயா்வு குறித்து கேள்வி எழுப்பினால், மத்திய அரசு நிதி தராததே காரணம் என தமிழக அரசு சொல்கிறது என்றார். மேலும், ஊரக வேலை உறுதி திட்ட நிதியை தமிழகத்துக்கு திமுகவால் பெற முடியவில்லை எனவும், தனிநபராக டெல்லிக்கு சென்று EPS இதை செய்துமுடித்தார் எனவும் அவர் கூறினார்.
Similar News
News October 20, 2025
மகிழ்ச்சி பரவ தலைவர்களின் தீபாவளி வாழ்த்துகள்

*அனைவருக்கும் மகிழ்ச்சியான, துடிப்பான தீபாவளி வாழ்த்துகள் – கவர்னர் ஆர்.என்.ரவி
*துன்பங்கள் கரைந்து ஒளிமயமான எதிர்காலம் பிறக்கட்டும் – EPS
*நெஞ்சம் நிறைந்த தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்: ராமதாஸ்
*நாடெங்கும் வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும்: செல்வப்பெருந்தகை
*இருள் இன்றுடன் விலகட்டும், மகிழ்ச்சி ஒளி எந்நாளும் பரவட்டும் – அன்புமணி
News October 20, 2025
சிறுநீரகம் செயலிழப்பு அறிகுறிகள் இதுதான்

சிறுநீரக நோய்கள் ஏற்பட்டால் அவற்றை உடனடியாக நம்மால் அறிந்துகொள்ள முடியாது. இதன் காரணமாக, சிறுநீரக நோய்கள் “அமைதியான கொலையாளிகள்” என்று அழைக்கப்படுகின்றன. சிறுநீரகம் செயலிழந்தால் சருமத்தில் வறட்சி, தொடர்ச்சியான அரிப்பு, சிவப்பு தடிப்புகள் அல்லது தோலின் நிறத்தில் படிப்படியாக மாற்றம் ஆகியவை ஏற்படுகின்றன. அப்படி இருந்தால் உடனடியாக டாக்டரை பார்த்து சிகிச்சை பெறுவது நல்லது.
News October 20, 2025
41 மரணங்களுக்கு விஜய்யே காரணம்: திமுக

விஜய் வீட்டிலிருந்து அரசியல் செய்வதாக டிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசலில் 41 அப்பாவிகள் உயிரிழந்ததற்கு விஜய் தாமதமாக சென்றதே காரணம் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் கரூர் மரணங்களுக்கு விஜய் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கரூருக்கு தாமதமாக சென்றதற்கான காரணத்தை சொல்லும் வரை திமுக விடப்போவதில்லை என ஏற்கெனவே அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.