News October 19, 2025

தஞ்சை: பாதுகாப்பு பணியில் 1,400 காவலர்கள்

image

தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளிலுள்ள கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதையொட்டி, மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கும், திருட்டை தடுப்பதற்கும் கடை வீதிகள், முதன்மைச் சாலைகளில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் தலைமையில் ஏறத்தாழ 1,400 காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Similar News

News October 21, 2025

தஞ்சை மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட்!

image

தென்மேற்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (அக்.21) இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க…

News October 21, 2025

JUST IN தஞ்சை: 5810 காலியிடங்கள் அறிவிப்பு

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. ஆரம்ப நாள்: 21.10.2025
4. கடைசி தேதி : 20.11.2025
5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
இத்தகவை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க…

News October 21, 2025

தஞ்சை: 7 வீடுகள் இடிந்து சேதம்!

image

வடகிழக்கு பருவமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அந்தவகையில் அக்.19 காலை 11 மணி முதல் லேசான மழை தொடர்ச்சியாக பெய்தது. இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக 3 குடிசை வீடுகள் உள்பட 7 வீடுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது. மேலும், அதிகபட்சமாக வெட்டிக்காட்டில் 32 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!