News October 19, 2025
குமரியில் ஒருவர் தற்கொலை

நித்திரவிளை கிளாச்சிக்கல் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (68) கொத்தனார். நோயால் பாதிக்கப் பட்டு உளைச்சலுக்கு ஆளான ஸ்ரீதரன் அக்.16ம் தேதி இரவு பூச்சி கொல்லி மருந்தை குடித்து விட்டு, மயங்கி கிடந்துள்ளார். மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றபோது ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுக்குறித்து நித்திரவிளை போலீசார் நேற்று (அக்.17) வழக்குப்பதிவு செய்து விசாரணை.
Similar News
News March 13, 2026
குமரி : குறைந்த வட்டியில் ₹10 லட்சம் கடன்

சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு தொழில் தொடங்க ‘விராசத் கைவினை கலைஞர் கடன் திட்டம்’ ₹10 லட்சம் வரை கடன் வழங்குகிறது. இதற்கு 4 முதல் 6 % மட்டுமே வட்டி வசூலிக்கப்படுகிறது. கடனை திருப்பி செலுத்த 5 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்படுகிறது. இதில் கடன் பெற, தொடங்கவிருக்கும் தொழிலில் 5 வருட முன்அனுபவம் தேவை. விண்ணப்பிக்க மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.
News March 13, 2026
குமரி; வங்கியில் ரூ.85,000 சம்பளத்தில் வேலை, டிகிரி போதும்

IDBI வங்கியில் 200 Assistant manager காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு, டிகிரி மற்றும் 2 வருட முன் அனுபவம் உள்ள வயது 21 முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஊதியமாக ரூ. 48480 – ரூ.85,920 வரை வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் <
News March 13, 2026
குமரி: காவல் படையில் சேர அரிய வாய்ப்பு.. APPLY…

கன்னியாகுமரி மாவட்ட கடலோர ஊர்க்காவல் படை அமைப்பில் மீனவ இளைஞர்கள் ஆண்களுக்கான 28 காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளது. எனவே, விருப்பமுள்ள 18 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் இன்று, நாளை (மார்ச் 13, 14) ஆகிய 2 நாட்களில் மட்டும் படிவங்களை பெற்று மார்ச் 20-ம் தேதிக்குள் பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT


