News October 19, 2025

பெரம்பலூர்: மூதாட்டியிடம் 6½ சவரன் தங்க நகை பறிப்பு

image

அரியலூரை சேர்ந்தவர் சுசிலாதேவி(65), இவர் தனது மகன்களான ஆனந்த்(33), சரவணன்(32) ஆகியோருடன் பெரம்பலூருக்கு வந்துள்ளார். அப்போது, அணுகுசாலை சக்தி நாகரில் சென்றபோது, பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் சுசிலாதேவியிடம் 6½ சவரன் தங்க சங்கிலையை பறித்து சென்றுள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, CCTV காட்சி மூலம் மர்ம நபர்களை தேடி வருகின்றன்ர்.

Similar News

News October 21, 2025

பெரம்பலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்!

image

தென்மேற்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (அக்.21) இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. SHARE NOW!

News October 21, 2025

பெரம்பலுர்: நாளை மின்தடை அறிவிப்பு

image

பெரம்பலுர், கிருஷ்ணாபுரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் (22.10.2025) நடைபெற இருப்பதால், கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, நெய்குப்பை, அன்னமங்கலம், வெங்கலம், தழுதாழை, உடும்பியம், தொண்டப்பாடி, வெண்பாவூர், விசுவக்குடி, ஈச்சங்காடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை, மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் மாணிக்கம் தகவல் தெரிவித்துள்ளார்.

News October 21, 2025

பெரம்பலூர்: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் மழைக்காலங்களில் மின்கம்பங்கள் வயல்வெளிகள் (ம) இதர இடங்களில் அருந்து விழுந்து இருந்தால் எச்சரிக்கையுடன் மின்சார துறையின் 9498794987 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்த வேண்டும், மேலும் பேரிடர் காலங்களில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், உடனடியாக ஆட்சியரகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையினை 1077 (அ) 18004254556 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டர் தகவல்.

error: Content is protected !!