News October 19, 2025
நாகை: புதிய காற்றழுத்த தாழ்வு நிலை- எச்சரிக்கை

மன்னர் வளைகுடா, தெற்கு அந்தமான் மற்றும் அதனியொட்டி கிழக்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வருகிற அக்.21ம் தேதி தென்கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, மேற்கு திசையில் வலுப்பெற கூட வாய்ப்பு உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் கடலுக்கு சென்றவர்கள் கரைத்திரும்ப வேண்டுமென மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 4, 2026
நாகை: விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

நாகை மாவட்டத்தை சேர்ந்த பட்டியலின விவசாயிகள் 50 பேருக்கு, எண்ணெய் வித்து பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகள் குறித்த ஒரு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி, வருகிற 6ஆம் தேதி சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடத்தப்பட உள்ளது. விவரங்களுக்கு 80567-08663 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News March 4, 2026
நாகை: இலவச தையல் மிஷின் வேண்டுமா?.. APPLY

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.
News March 4, 2026
நாகை: NDA கூட்டணி சார்பில் ஆலோசனை கூட்டம்

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அமமுக மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் அதிமுக கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் அதிமுக நிர்வாகிகளும், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது.


