News October 19, 2025
தஞ்சை: மின்சாரம் தாக்கி துடிதுடித்து பலி!

தேப்பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராமு (வயது 50). தச்சு தொழிலாளியான இவர் நேற்று மதியம் ஆட்டுக்கு இலை பறிக்க அந்த பகுதியில் ஒரு கட்டிடத்தின் மேல் ஏறி மரத்திலிருந்து இலையை பறித்துள்ளார். அப்போது உயர் மின்னழுத்த கம்பியில் மரத்திலிருந்து வெட்டிய இலை விழுந்தது. அதை எடுக்கும் போது ராமு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து திருவிடைமருதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Similar News
News October 21, 2025
தஞ்சை மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட்!

தென்மேற்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (அக்.21) இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க…
News October 21, 2025
JUST IN தஞ்சை: 5810 காலியிடங்கள் அறிவிப்பு

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. ஆரம்ப நாள்: 21.10.2025
4. கடைசி தேதி : 20.11.2025
5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க…
News October 21, 2025
தஞ்சை: 7 வீடுகள் இடிந்து சேதம்!

வடகிழக்கு பருவமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அந்தவகையில் அக்.19 காலை 11 மணி முதல் லேசான மழை தொடர்ச்சியாக பெய்தது. இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக 3 குடிசை வீடுகள் உள்பட 7 வீடுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது. மேலும், அதிகபட்சமாக வெட்டிக்காட்டில் 32 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.