News April 17, 2024
ஆண்டிபட்டி அருகே ஒருவர் பலி

முத்தாலம்பாறையைச் சேர்ந்தவர் தனிக்கொடி. இவர் வீட்டின் அருகே தனி தகர செட்டில் தங்கி இருந்தார். கடந்த 14 ஆம் தேதி அவர் வீட்டை விட்டு வெளியே வந்த அவர் தடுமாறி கீழே விழுந்து பாறையில் மோதியதில் தலையில் காயமடைந்தார். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து கடமலைக்குண்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 9, 2026
தேனி: தேவாரத்தில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவையின் 24-வது முகாம், உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட தேவாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை (ஜன.10) நடைபெறவுள்ளது. முகாமில் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மின் இதய வரைபடம், காசநோய், தொழுநோய் கண்டறியும் பரிசோதனைகள் என பல்வேறு பரிசோதனைகள் செய்யப்படும். எனவே, அப்பகுதி மக்கள் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
News January 9, 2026
தேனி: தேர்வு இல்லாமல் ARMY வேலை.. உடனே APPLY..

இந்திய ராணுவத்தில் SSC (Technical) பிரிவில் 381 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 35 வயதிற்குட்பட்ட ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். BE., B.Tech ல் ஏதேனும் ஒரு பிரிவில் பயின்றவர்கள் பிப்.5 க்குள் இந்த <
News January 9, 2026
தேனி: தவறி விழுந்து இளைஞர் பலி..!

கம்பம் பகுதியை சேர்ந்தவர் சுதர்சணன் (28). கொத்தனாரான இவருக்கு சிறுவயது முதலே வலிப்பு நோய் இருந்து வந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது திடீரென வலிப்பு ஏற்பட்டு சுதர்சணன் தவறி கீழே விழுந்துள்ளார். இதில்படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு.


