News October 19, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் மழை பெய்யும் நேரங்களில் மின் கம்பங்களின் அருகில் நிற்பதையோ கீழே கிடக்கும் மின் கம்பிகளின் அருகே செல்வதையோ கட்டாயம் தவிர்க்க வேண்டும் மற்றும் இடி மின்னல் நேரத்தில் வீட்டில் உள்ள அதிக மின் திறன் கொண்ட மின்சார உபகரண பொருட்களை அனைத்து வைக்கும் வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.
Similar News
News October 21, 2025
கிருஷ்ணகிரியில் 400 பேர் பலி!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஜனவரி முதல் அக்டோபர் 12 வரை தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் நடந்த விபத்துகளில் சம்பவ இடத்திலும், சிகிச்சையிலும் சேர்த்து 400 பேர் வரை உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2023ல் 753 ஆக இருந்த உயிரிழப்பு 2024ல் 683 ஆக குறைந்தது. நடப்பாண்டில் இறப்பு மேலும் குறைய வாய்ப்புள்ளதாகப் போலீசார் கருதுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் கவனமாக பயணிக்கவும் அறிவுரை வழங்கப்படுகிறது.
News October 21, 2025
கிருஷ்ணகிரி: இளைஞர்களுக்கு அழகுக்கலை பயிற்சி

ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்(தாட்கோ)தலைசிறந்த தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை, அழகுக்கலை மற்றும் பச்சைக்குத்துதல் போன்ற பயிற்சிகளை அளிக்கபட வுள்ளன. 8th முதல் 12th வரை தேர்ச்சி பெற்ற 18 வயதிலிருந்து 35 வரையிலானவர்கள், www.tahdco.com முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
News October 20, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (அக்.20) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.