News October 19, 2025

நாகையில் மழையால் பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை

image

திருமருகல் ஒன்றிய பகுதிகளில் 3,583 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நேரடி நெல் விதைப்பு மூலம் விவசாயிகள் சாகுபடி செய்து உள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அறுவடைக்கு தயரான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நெற்பயிர்கள் அழுகி துர்நாற்றம் விசுகிறது. இதனால் சாகுபடி செய்த விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். மேலும் அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News

News October 19, 2025

நாகை: மழை, வெள்ளம் பாதிப்புக்கு இதை தெரிஞ்சிக்கோங்க!

image

நாகையில் புதிய காற்றழுத்த தாழ்வுப் மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில், நாகையில் மின்னலுடன் கூடிய பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க மாநில உதவி – 1070, மாவட்ட உதவி – 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் கட்டயாம் உதவும். இதனை Save பண்ணிக்கோங்க.

News October 19, 2025

நாகைக்கு மழை எச்சரிக்கை!

image

வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (அக்.19) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மின்னல் தாக்கும் நேரங்களில் மக்கள் திறந்தவெளி மற்றும் மரங்களின் கீழ் நிற்காமல் தவிர்ப்பது நல்லது

News October 19, 2025

நாகையில் சாலை மறியல் போராட்டம்

image

நாகை மாவட்டம் வாழக்கரையில் நேற்று(அக்.18) இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் (DPC) TNCSC தாளடி நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து, K.சித்தார்த்தன் தலைமையில் இந்திய மார்க்சிஸ்ட் கட்சியினஎ சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்,. இதில் விவசாயிகள், பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!