News October 19, 2025
8 மாவட்டங்களில் பேய் மழை வெளுக்கும்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 8, 2026
தமிழ்நாட்டில் தங்கம் பூமிக்கு அடியில் கிடைத்தது எப்போது?

தமிழ்நாட்டில் பூமிக்கு அடியிலிருந்து எப்போது முதல் முறையாக தங்கம் கண்டெடுக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா? தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் 1876-ல் தான் ஆங்கிலேயர் காலத்தில் முதல் முறையாக தங்கம் கண்டெடுக்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட அகழாய்வில் பழங்கால ஈமச்சடங்கு சார்ந்த தங்கம், பெரும் ஈமக்காடு (Megalithic Burial Site) ஆகியவை கிடைத்தது. அது பற்றிய ஆய்வுகள் இப்போதும் தொடர்கின்றன.
News April 8, 2026
கரூர் சம்பவம்: செந்தில் பாலாஜி புது விளக்கம்

கரூர் சம்பவத்தில் நீங்கள் குறிவைக்கப்படுகிறீர்களா என்ற கேள்விக்கு செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார். சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்றவர்கள் அளித்த தகவலின்பேரில், ஹாஸ்பிடலுக்குச் சென்றேன். அங்கு தாமதமாக வந்தது யார், 41 பேர் பலியானபோது அங்கிருந்து புறப்பட்டவர் யார் போன்ற கேள்விகளை விஜய்யிடம்தான் கேட்க வேண்டும். ஆனால், என் மாவட்ட மக்களை காப்பாற்றச் சென்ற என்னிடம் கேள்வி கேட்பதாக தெரிவித்தார்.
News April 8, 2026
ஒரு MLA-வின் பணிகள் என்ன? எவ்வளவு நிதி வழங்கப்படும்?

*MLA தொகுதி மேம்பாட்டு நிதியாக ஆண்டுக்கு ₹3 கோடி வழங்கப்படுகிறது.
*இதைக் கொண்டு குடிநீர், பள்ளிகள் கட்டமைப்பு, சிறிய பாலங்கள், சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை பணிகளை மேற்கொள்ளலாம்.
*சட்டப்பேரவையில் கொண்டு வரப்படும் திட்டங்கள், தீர்மானங்களுக்கு தொகுதி மக்களின் நலன் சார்ந்து ஆதரவு (அ) எதிர்ப்பு தெரிவிக்க MLA-வுக்கு உரிமை உண்டு. *சபாநாயகர், து.சபாநாயகர், ராஜ்யசபா MP-க்களை MLA-க்களே தேர்வு செய்வர்.


