News October 18, 2025
கோர விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிராவில் நடந்த விபத்தில் 8 பக்தர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குலதெய்வம் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது, சந்த்ஷாலி கட் என்ற இடத்தில் வேன் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்தது. வேன் உருண்டதால் உள்ளேயிருந்த பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 8 பேர் அங்கேயே உயிரிழந்த நிலையில், பலர் படுகாயங்களுடன் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News October 19, 2025
பிஹார் தேர்தல்: நடிகையின் வேட்புமனு நிராகரிப்பு

பிஹார் தேர்தலில் போஜ்புரி நடிகை சீமா சிங்கின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆவணங்களில் உள்ள முரண்பாடுகள் காரணமாக வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிராக் பஸ்வானின் LJP (RV) கட்சி சார்பாக அவர் போட்டியிட இருந்தார். சிறிய தவறால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், மறுபரிசீலனைக்காக மீண்டும் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
News October 19, 2025
ரஷித் கானின் செயலால் பாகிஸ்தான் அதிர்ச்சி

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 3 ஆப்கன் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் பலியான சம்பவத்தை கடுமையாக சாடியிருந்தார் ரஷித் கான். இதன் தொடர்ச்சியாக தன்னுடைய X-ன் பயோவில் இருந்த Lahore Qalandars அணியின் பெயரை நீக்கியுள்ளார். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் தான் இடம்பெற்றிருந்த அணியின் பெயர்தான் Lahore Qalandars. இதனால், PSL-ல் அவர் இனி விளையாடமாட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News October 19, 2025
மழை சீசனில் இந்த கசாயம் குடிங்க!

மழைக் காலத்தில் கடும் இருமலால் பாதிக்கப்படுபவர்கள் இந்த கசாயத்தை குடிக்கும்படி, சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் *முதலில் முளைக்கீரையை சுத்தம் செய்து ஆய்ந்து ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளவும் *ஒரு பாத்திரத்தில் 400 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி, அதில் அதிமதுரம் & மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும் *நீர் நன்கு கொதித்ததும், அதை வடிகட்டி குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கு பகிரவும்.