News October 18, 2025
முன்னாள் முதல்வர் நாராயணசாமி தீபாவளி வாழ்த்து

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில், நாம் கொண்டாடும் பண்டிகைகளில் தீபாவளிக்கு என தனியிடம் உண்டு, சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் மகிழ்ச்சி அள்ளித்தரும் திருநாள் தீபாவளி சாதி, மதம், இனம், மொழி என்ற பேதமின்றி, சமத்துவத்தின் அடையாளமாக தீபாவளித் திருநாள் கொண்டாடப்படுகிறது. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.
Similar News
News October 19, 2025
புதுவை: தீபாவளியை முன்னிட்டு தீயணைப்பு துறை எச்சரிக்கை

புதுச்சேரி கோட்ட தீயணைப்பு அலுவவலர் இளங்கோ நேற்று செய்தி வெளியிட்டுள்ளார். அதில், தீபாவளி பண்டிகையில் உயரே சென்று வெடிக்கும் ராக்கெட், அவுட் போன்ற பட்டாசுகள் மற்றும் சீன பட்டாசுகள் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. பட்டாசுகளை வெடிக்கும்போது குழந்தைகள் பருத்தியாடைகள் மற்றும் காலணிகளை அணிந்திருப்பது பாதுகாப்பானது. மேலும் குடிசைப்பகுதிகளில் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
News October 19, 2025
புதுவை: மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

புதுவை, வில்லியனூர் கணுவாபேட்டை சேர்ந்தவர் சதாம்உசேன்(24). கட்டிட தொழிலாளியான இவர் நஜ்மல்ஆலம்(35), என்பவர் வீட்டில் டைல்ஸ் பதிக்கும் வேலை செய்த போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 19, 2025
புதுச்சேரி: தீபாவளி முன்னிட்டு ரூ.1000 போனஸ்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் நலிவடைந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தலா ரூ.1,000 நிதியுதவியை புதுச்சேரி அரசு வழங்குகிறது. இதற்காக அரசுக்கு மொத்தம் ரூ.13.16 கோடி செலவாகிறது. இதுகுறித்து புதுச்சேரி அரசு, ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அர்ஜுன் இராமகிருஷ்ணன் இன்று அறிவித்துள்ளார்.