News October 18, 2025
மூன்றாம் பாலினத்தவர் மீது பாகுபாடு.. SC அதிருப்தி

மூன்றாம் பாலினத்தவரின் உரிமைகளை பாதுகாப்பதில் மத்திய, மாநில அரசுகள் அலட்சியம் காட்டுவதாக சுப்ரீம் கோர்ட் வேதனை தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு வழங்கும் சட்டங்கள் முழு மூச்சில் செயல்படுத்தப்படவில்லை என்றும் அவை இறந்த கடிதங்கள் ஆகிவிட்டன எனவும் SC கூறியுள்ளது. எனவே, உரிமைகள் வழங்குவதற்கு செயல்திட்டத்தினை உருவாக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து SC உத்தரவிட்டுள்ளது.
Similar News
News October 19, 2025
Business Roundup: HDFC வங்கியின் நிகர லாபம் ₹19,610 கோடி

*இந்திய பங்குச்சந்தைகள் ₹13,840 கோடி அந்நிய முதலீடுகளை ஈர்த்துள்ளன. *2025 Q2 காலாண்டில், தனியார் வங்கிகளிலேயே அதிகபட்சமாக HDFC ₹19,610 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. *GST குறைப்பின் மூலம் PM மோடியின் தீபாவளி பரிசு மக்களுக்கு சென்றடைந்ததாக நிதியமைச்சர் பேச்சு. *RBL வங்கியில் ₹26,850 கோடி முதலீடு செய்ய உள்ளதாக UAE-ஐச் சேர்ந்த Emirates NBD அறிவிப்பு.
News October 19, 2025
தீபாவளிக்கு சொந்த இவர்கள் ஊருக்கு செல்ல முடியாது

தீபாவளியன்று வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்யக்கூடும் என IMD அறிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும், மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள், பொறியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மழைநீர் வடிகால் ஒப்பந்ததாரர்களின் ஊழியர்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்தந்த நகராட்சிகளில் இருந்து மழைக்கால தடுப்பு பணிகளில் ஈடுபடவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
News October 19, 2025
கடவுளை வணங்கும் போது இப்படி நடந்து இருக்கா?

கடவுளிடம் வைக்கும் வேண்டுதல் நிறைவேறுமா என்பதை சில அறிகுறிகளின் மூலம் அறியலாம் ➥வேண்டும் பொழுது கண்களில் கண்ணீர் வந்தால் வேண்டுதல் பலிக்கும் ➥குழந்தை அழும் சத்தம் கேட்டால், கடவுள் வேண்டுதலை நிறைவேற்றுவார் என்பது ஐதீகம் ➥வேண்டும் பொழுது பல்லி சத்தமிட்டால் வேண்டுதல் பலிக்கும் ➥கடவுளிடம் வேண்டும் பொழுது மணி அடிக்கும் சத்தம் கேட்டாலும், கடவுள் வேண்டுதலை ஏற்றுக் கொண்டார் என நம்பப்படுகிறது.