News October 18, 2025
பாமகவில் புதிய பொறுப்பு

செங்கல்பட்டு, மாமல்லபுரம் நகர பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் பதவி நீண்ட நாட்கள் காலியாக இருந்தது. இந்நிலையில் இன்று (அக்.18) மாமல்லபுரம் நகர பாட்டாளி மக்கள் கட்சி செயலாளராக ஆறுமுகம், ராமதாஸ் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார். இந்நிகழ்வின் போது பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Similar News
News October 19, 2025
செங்கல்பட்டு: நாலாபுறமும் சிதறியோடிய லாரி டயர்கள்!

சேலத்தில் இருந்து சென்னைக்கு, வீடு கட்டுமானத்திற்கு தேவையான மரப்பலகைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. வாலாஜாபாத் – வண்டலுார் சாலை, படப்பை புது மேம்பாலத்தின் துவக்க பகுதியில் உள்ள தடுப்பு சுவரில் மோதி, லாரி கவிழ்ந்தது. இதில், லாரி பலத்த சேதமடைந்தது டயர்கள் சிதறியோடின. காயமடைந்த ஓட்டுநரை, அப்பகுதியினர் மீட்டு, தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
News October 19, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு இன்று (அக்.18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 18, 2025
செங்கல்பட்டு: Certificate தொலைஞ்சிருச்சா..கவலை வேண்டாம்!

செங்கல்பட்டு மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது <