News October 18, 2025

புதுகை: ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய ஆட்சியர்

image

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் வட்டாரத்தில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் இன்று நடைபெற்றது. அதனை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இன்று (அக்.,18) துவக்கி வைத்து பார்வையிட்டு, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.

Similar News

News October 19, 2025

புதுகை: சிறுமிக்கு பாலியல் தொல்லை!

image

புதுகையை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென வீட்டிலிருந்து மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரில் மாத்தூர் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் மாணவி தஞ்சாவூரில் இருந்து தனது பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு ஒரு வாலிபர் தன்னிடம் பாலியல் தொல்லையில் ஈடுபடுவதாக தெரிவித்தார். இதையடுத்து திருச்சியை சேர்ந்த கஜேந்திரன் (20) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

News October 19, 2025

புதுகை: பேருந்து சக்கரத்தில் சிக்கி பரிதாப பலி

image

புதுகையிலிருந்து பெருங்களூர் நோக்கி நேற்று மாலை அரசு டவுன் பஸ் ஒன்று சென்றது. அப்போது பஸ்சின் முன்பக்க சக்கரத்தில் அடையாளம் வாலிபர் ஒருவர் திடீரென விழுந்ததில் அவரது உடல் மீது பஸ் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கணேஷ்நகர் போலீசார் இறந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News October 19, 2025

புதுகை: குளத்தில் மூழ்கி பரிதாப பலி

image

அன்னவாசல் அருகே முதலிப்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல், கூலி தொழிலாளியான இவர் இன்று மாங்குடி குவாரியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றபோது எதிர் பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி பலியானார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் தீயணைப்புத் துறையினர் சக்திவேலின் உடலை மீட்டனர். தொடர்ந்து இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர

error: Content is protected !!