News October 18, 2025
கோரம்பள்ளம் குளத்தில் சண்முகையா எம்.எல்.ஏ ஆய்வு

வடக்கு காலங்கரை கிராமத்தில் கடந்த ஆண்டு கனமழையில் கரை உடைந்து பாதிப்புக்குள்ளான கோரம்பள்ளம் குளத்தின் கரைகளை
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் மழைக்காலங்களில் குளத்தின் கரைகளின் தன்மை மற்றும் நீர்வரத்தின் அளவை தொடர்ந்து கண்கானிக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
Similar News
News October 19, 2025
எப்போதும்வென்றான் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு

எப்போதும்வென்றான் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சோலையப்ப சுவாமி திருக்கோவிலில் இன்று சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
News October 18, 2025
தூத்துக்குடி: சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

தூத்துக்குடி மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!
News October 18, 2025
தூத்துக்குடியில் PF குறைதீர் நாள் கூட்டம் அறிவிப்பு

வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில் 2.0 என்ற வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை மாதந்தோறும் நடத்தி வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த மாதத்திற்கான வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் நாள் கூட்டம் சாயர்புரத்தில் உள்ள போப் பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.